Wednesday, August 11, 2021

Double Review of a Book in The Hindu- First time.

 இப்போதெல்லாம்

வைத்திருந்ததைத் தேடுவதற்கேஅதிக நேரம் ஆகிறது.


அதிலொன்று இது.


முன்பொரு முறை நண்பர் பேராசிரியர் ஆர்.சிவக்குமார் ( Sivakumar Rangasamy ) அவர்களுக்கு ஒரு பின்னூட்டத்தில் இத்தகவலைக்  குறிப்பிட்டேன். ஆனால் அச்சமயம் இந்த நாளிதழ் நறுக்கு நகல் கையிலகப்படவில்லை.


பின்னர் (2015ல்) பதிவிட்டது கிடைத்தது.

  

தற்போது Mark Zuckerberg நினைவுபடுத்தி மீண்டும்...

*


1986ல் 

சட்டக் கல்வி பயின்று கொண்டிருந்தபோது,


LAW FOUNDATION TAMILNADU

எனும் சிந்தனைக் களம் நண்பர்களுடன் இணைந்து ஏற்படுத்தினோம்.


அதன் ஒரு நிகழ்வாக-

ALL INDIA LAW SEMINAR ஏற்பாடு.


மாநாட்டில் முதன்மை உரை:

மனித உரிமைக் காவலர்

நீதியரசர் வீ.ஆர் கிருஷ்ணையர்.


தனிமையில் சந்திக்க வாய்த்தபோது, 

"சட்டம் படிக்க நீ முனைந்தது மகிழ்ச்சி.இருப்பினும் ஒரு அதிலொரு துறையைத் தேர்ந்து ஆழக் கற்றுக்கொள்" என வழிகாட்டடினார்.


குறிகேட்பது போல,

அவரிடமே "எந்தத் துறையைத் தேர்ந்து எடுக்கலாம்" என

அப்போதைய அறியாமையில் கேட்டேன்.


என்னை நோக்கி, 


"இந்த நிகழ்ச்சிக்கு நீ

என்னை அழைக்க மூன்று கடிதங்கள் எழுதியுள்ளாய்.

on enjoying the tune and tenor of your epistles, I am sure that you would be able to contribute to Human Rights and go for that discipline" என்று அன்புடன் ஆற்றுப்படுத்தினார்.


அதன்பின் பத்தாண்டுகள்அர்ச்சுனக் குறிபார்ப்பாக…


என் பார்வை மனித உரிமைக்களத்தில் மட்டுமே.


என்முதல் நூலுக்கு அவர் அணிந்துரை பெறமுயன்றேன்;

வாய்க்கவில்லை.


அதன்பின்

இரண்டாவது ஆங்கில நூலுக்கும்

இயலவில்லை.


புத்தகத்தைப் படித்துவிட்டு அவரே

THE HINDU நாளிதழுக்கு REVIEW எழுத விரும்பினார்.


 ஆனால் அதற்குள் அவ்விதழில் இந்த நூல் குறித்த ஒரு REVIEW வந்துவிட்டது.


இருப்பினும், ஆற்றுப்படுத்தப் பாயும் பேரன்புப் பிரவாகமாக அவரே

THE HINDU அலுவலகத்தைத்

தொடர்புகொண்டு ,

" இந்நூலுக்கு

முன் வந்த REVIEW போதாது. எனது REVIEW வைத் தருகிறேன்" என அனுப்பி வெளியான REVIEW இங்கே. 


வெகுநாள் கழித்து NAAC பணியில் கேரள மாநிலம் சென்றபோது அவரது இல்லம் சென்று அவரைச் சந்தித்தேன்.


அப்போது,

THE HINDU வரலாற்றில் ஒரே  நூலுக்கு இரண்டுமுறை REVIEW எப்படி வந்தது என்ற முன் சொல்லப்பட்ட நிகழ்வுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.


 சந்திப்பின் போது அவரது தகவல் அளித்த வற்றாத  மகிழ்வும்,

அப்பெருந்தகையின் பேரன்பும் மறக்கவும் கூடுமோ?


இன்று என் படிப்பறை ஒழுங்கு படுத்தும் பணியில் 

இப்பொக்கிஷம் கண்ணில் பட்டதே ...

இங்கே பகிர்வுக்கு


*

(Originally posted in FB on Oct 22, 2015)

Saturday, August 7, 2021

Sunday, August 1, 2021


 தமிழ்ச் சிறுகதை வரலாறும் தலைசுற்ற வைக்கும் குழப்பங்களும்-7

தமிழ்ச் சிறுகதை வரலாறும் தலைசுற்ற வைக்கும் குழப்பங்களும்-6
 


 தமிழ்ச் சிறுகதை வரலாறும் தலைசுற்ற வைக்கும் குழப்பங்களும்-5


 தமிழ்ச் சிறுகதை வரலாறும் தலைசுற்ற வைக்கும் குழப்பங்களும்-4


 தமிழ்ச் சிறுகதை வரலாறும் தலைசுற்ற வைக்கும் குழப்பங்களும்-3

 தமிழ்ச் சிறுகதை வரலாறும் தலைசுற்ற வைக்கும் குழப்பங்களும் 2


தமிழ்ச் சிறுகதை வரலாறும் தலை சுற்ற வைக்கும் குழப்பங்களும். 1


 

அதிரடி

 அதிரடி அதிரடி 

தற்போதெல்லாம்  நாளிதழ்களிலும் பிற ஊடகங்களிலும் எங்கு பார்த்தாலும், எதற்கெடுத்தாலும் 

ஒரே அதிரடியாகத் தான் இருக்கிறது. 

மிகச்சாதாரண நிகழ்வு கூட ‘அதிரடி’ என்று அடைமொழி சேர்க்காமல் ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதே இல்லை. ஒரு புள்ளி அசைந்தால் கூட ‘புரட்சி’ என்றும், பெண்ணொருத்தி தன் கூந்தலை அள்ளி முடித்தால் கூட ‘அதிரடி’ என்றும் வார்த்தை சேர்க்காமல் ஊடகத்தாரால் நிகழ்வுகளைச் சொல்ல முடியாது போலிருக்கிறது. 

போகிற போக்கை பார்த்தால்,  சமையலறையிலோ அல்லது சாலையோர உணவகத்திலோ ஒரு தோசையைத் திருப்பிப் போட்டால் கூட உடனேயே  ஓடிப்போய் தோசை, கல்லில் திரும்ப விழுவதற்குள் ‘அதிரடியாக’ என்ற வார்த்தையை அங்கே போடாமல்   ஊடகங்கள் அந்நிகழ்வைச் சொல்லாது. கூடுதலாக, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கும் அதிரடிப்பாட்டி என்று தலைப்பூச்சூட்டி நாலுகாலம் படச்செய்தி போடுவார்கள் ஊடகத்தார்.

 சரி,அதிரடி என்றால் என்ன?

தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்,  திரு மு சண்முகம் பிள்ளை அவர்களைத் தொகுப்பாசிரியராகவும், பேராசிரியர்கள் அ.ச.ஞானசம்பந்தம், அ.மு.பரமசிவானந்தம், கொண்டல் சு மகாதேவன் ஆகியோர்களை மேலாய்வாளர்களாகவும் கொண்டு பதிப்பித்துள்ள தமிழ்- தமிழ் அகரமுதலி (பக்26) அதிரடி என்ற சொல்லுக்குப் ‘பெருங் கலகம்; மிரட்டு; அளவுக்கு மிஞ்சியது’ என்று பொருள் தந்து நிற்கிறது.

தமிழ் இலக்கியங்களில் அதிரடி என்ற சொல் ஆளப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. 

‘அதிர்’ என்ற சொல் (பெரும் ஓசை என்ற பொருளில்) மலைபடுகடாம், நற்றினை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய இலக்கியங்களிலும்-

அதே பொருளில் ‘அதிர்பு’ என்ற சொல் பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகம் ஆகிய இலக்கியங்களிலும்-

அதிர என்ற சொல் (நடுங்கச்செய்ய என்ற பொருளில்) பட்டினப்பாலை, நற்றினை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், பரிபாடல் திரட்டு, அகநானூறு, புறநானூறு, குறள், ஐந்திணை எழுபது, சிலப்பதிகாரம் என்ற இலக்கியங்களிலும்-

‘அதிர்க்கும்’ என்ற சொல் (ஓசையெழுப்பும், நடுங்கச்செய்யும் எனும் பொருளில்) பதிற்றுப்பத்து, பரிபாடல், நான்மணிக்கடிகை என்ற இலக்கியங்களிலும்-

அதிர் கழல் வேந்தன் என்ற சொல் மணிமேகலையிலும்-

அதிர் குரல் என்ற சொல் நற்றினை, புறநானூறு ஆகிய இலக்கியங்களிலும்-

அதிர் குரல் எழிலி  என்ற சொல் ( இடிமுழக்கத்துடன் மழை தரு மேகம் எனப் பொருள் பட)  நற்றிணையிலும்

அதிர் குரல்ஏறு(உரத்த ஓசையுடன் கத்துகிற காளை)என்ற சொல் புறநானூற்றிலஉம்    காணப்படுகிறது.


ஊடகத்தார் எந்த அதிரடியைக் குறிப்பிடுகிறார்களெனத் தெரியவில்லையே!

ஊடக உலகத்தாரே! அரசோ, மாவட்ட ஆட்சியரோ, நீதிமன்றங்களோ வழக்கமான மிகச்சாதாரன முடிவுகள் அறிவித்தால்கூட அதிரடி உத்தரவு என்று அலப்பறை செய்கிறீர்களே 

ஏன்?ஏன்?

**

 -