Thursday, December 30, 2021

 


வேப்ப மரம்


என் முகப்பு:

 

1919,சூன் 26 இல்வெளியிடப்பட்ட இக் கதையைத் தேடிக்கண்டு திரு. பெ. தூரன் தமது பாரதி தமிழ் நூலில் முதலில் பதிப்பித்துள்ளார். (பக் 328-335)

 

                                    போதி மரத்தடி புத்தருக்குப் புது ஞானம் வழங்கியது;

கவிதைச் சித்தனுக்கு  ஒருவேப்பமரம் நற்கனவு நல்கியதால் இங்கு நமக்கொரு பொற்கதை கிடைத்துள்ளது.

 

கதை என்ன?


தமிழ் தழைக்கப் பொதிகை வந்த குறுமுனி அகத்தியரும்,

நெல்லைத் தரணி தழைக்கப் பாய்ந்தோடும் தாமிரபரணியும்

நீராட்டச் சங்கமம் நிகழ்த்திய களிப்பான கற்பனைக் கனவுக்காட்சி.


கண்டது யார்? கவிராஜனா? இல்லை.

கரைக்குச் சற்றருகே தோப்பில் நின்ற முப்பது வயது இளமரம், உடலெல்லாம் தமிழ்ச் சொற்கள் உதித்ததொரு ‘ரிஷிபோதம்’ பெற்ற, வேப்ப மரம்.!

ஆம்.


வேப்ப மரம் கனவில் சொன்ன காட்சி விரிகிறது கதையாய் நமக்கு.


வேம்பு கசக்கும், ஆனால் தமிழுதிர்க்கும் இந்த வேப்ப மரக்கதை இனிக்கும்.

 


அகஸ்த்ய மஹரிஷி ஒரு ‘காமரூபி. 

தாம்ரபர்ணியம்மனும்  அப்படியே.’

 

அதிர்ச்சியடைய வேண்டாம்; .

கற்பனைக் குதிரை தாவியேறிக் கண்ட திசை போக வேண்டாம் வாசகர்களே.


‘காமரூபி’ என்றால்.... ‘நினைத்தபோது நினைத்த வடிவந்தரிக்கும் திறமை படைத்தவர்’ என்று அர்த்தம்.

 

இருவரும் மானிட வடிவு கொண்டு- ஆணுக்குப் பதினாறு, பெண் பன்னிரண்டு வயது – இரவிலிருந்து பொழுது விடியும்வரை ஜலக்கிரீடை விளையாட்டு.

 

அங்கேயே நிற்க வேண்டாம். 

அதுவல்ல முக்கியச்செய்தி.

 

படித்தறிந்து, உள்ளத்தே பதித்து வைத்துக் கொள்ள வேண்டிய படிப்பினை விடிந்தபின் நிகழ்ந்து கிடைத்ததே.

 

வேப்ப மரம்போல ரிஷி போதம் பெறனும்.

அதனாலென்ன பயன்?

 

“ஸகல ஜந்துக்களின் பாஷைகளிலும் சிறந்த ஞானம் இயல்பாகவே உண்டாய்விடும்.எல்லா ஜந்துக்களிடத்திலும் ஸமமான பார்வையும் ஸமமான அன்பும் உண்டாகும்.எல்லா உயிர்களிடத்திலும் தன்னையே காண்பதான தேவதிருஷ்டி ஏற்படும்.’’

 

'சரிநமக்குத் தெரியாத விஷயங்கள் உலகத்தில் எத்தனையோ உண்டென்று ஷேக்ஸ்பியரே சொல்லி யிருக்கிறார்’

 

 

இன்னும் எதற்கு இங்கே...

 

வாங்க ரிஷிபோதம் பெற்ற வேப்பமரத்தைக் காண.

 

 

 

 

 

நுழைவு:

 

வேப்ப மரம்

   -பாரதியார்

 

இளவேனிற் காலத்தில் ஒரு நாள்காலை வேளையில் நான் மலயகிரிச் சார்பிலே தனியாக உலாவிக் கொண்டிருந்தேன். நெடுந்தூரம் சுற்றிய பிறகு என் உடம்பில் சற்றே இளைப்புண்டாயிற்று. அந்த இளைப்புத் தீரும் பொருட்டாக அங்கொரு தோப்புக்குள்ளே போய் ஒரு வேப்ப மரத்தடியில் படுத்துக் கொண்டேன்இன்பமான காற்று வீசிற்று. சிறிது நேரத்துக்குள் கண்ணயர்ந்து நித்திரையில் ஆழ்ந்து விட்டேன். அப்போது நான் கண்ட அபூர்வமான கனவை இங்கெழுதுகிறேன்.

 நான் தூங்கிக் கொண்டிருக்கையில் "ஏ மனிதாஏ மனிதாஎழுந்திருஎழுந்திரு” என்று அமானுஷிகமாக ஒலி யொன்று கேட்டது.

 இந்த ஒலியைக் கேட்டவுடன் கண்ணை விழித்தேன். உண்மையாகவே விழிக்கவில்லை. கனவில் விழித்தேன். அதாவதுவிழித்துக் கொண்டதாகக் கனவு கண்டேன்.   விழித்து, “யார் கூப்பிட்டது?" என்று கேட்டேன்.

 நான்தான் வேப்ப மரம்நான்தான் கூப்பிட்டேன். எழுந்திரு” என்று மறுமொழி உண்டாயிற்று.

 உடனே நான் யோசிக்கலானேன். 'ஓஹோஓஹோ! இது பேயோபிசாசோயக்ஷர்கிந்நரர்கந்தர்வர் முதலிய தேவ ஜாதியாரோவன தேவதைகளோ - யாரோ தெரியவில்லை. இல்லாவிட்டால் வேப்ப மரம் எங்கேனும் பேசுவதுண்டோ அடபோடாபேபாவதுஅதெல்லாம் சுத்தக் கட்டுக் கதை யன்றோநாம் உண்மையாகவே கண்ணை விழித்து ஜாக்ர நிலை யடையவில்லை. இன்னும் கனவு நிலையிலேதானிருக்கின்றோம். இந்த ஒலி கனவில் கேட்கும் கற்பனை யொலி:

 இங்ஙனம் நான் யோசனை செய்து கொண்டிருக்கையில், "ஏ மனிதாஏ மனிதாஎழுந்திரு” என்று மறுபடி சத்தமுண்டாயிற்று.

 நீ யார்?" என்று பின்னுங்கேட்டேன்.

 "நான் வேப்ப மரம். என் அடியிலேதான் நீ படுத்திருக்கிறாய். உனக்குச் சில நேர்த்தியான விஷயங்கள் கற்றுக் கொடுக்கும் பொருட்டாக எழுப்புகிறேன்" என்று மறுமொழி வந்தது.

 அப்போது நான் 'சரிநமக்குத் தெரியாத விஷயங்கள் உலகத்தில் எத்தனையோ உண்டென்று ஷேக்ஸ்பியரே சொல்லி யிருக்கிறார். அந்தப்படி மரங்களுக்குப் பேசும் சக்தி இருக்கலாம். அவ் விஷயம் நமக்கு இதுவரை தெரியாம லிருக்கலாம். ஆதலால்இந்த மரத்துடன் ஸம்பாஷணை செய்து விஷயத்தை உணர்ந்து கொள்வோம்என்றெண்ணிக் கண்ணைத் திறந்து கொண்டெழுந்து நின்றேன். (உண்மையாகவே எழுந்து நிற்கவில்லை. எழுந்து நின்றதாகக் கனவு கண்டேன்.)

 எழுந்து நின்று கொண்டு, "வேப்ப மரமேஉனக்கு மனித பாஷை எப்படித் தெரிந்ததுமனிதரைப்போல் நெஞ்சுவாய்தொண்டை அண்ணம்நாக்குபல்உதடு என்ற கருவிகளில்லாதபோது மனித பாஷை பேசுவது ஸாத்யப்படாதே! எங்களிலே பல் மாத்திரம் விழுந்தவர்களுக்கும் உச்சரிப்பு நேரே வராமல் போகிறதேஅடி நாக்கில்லாதவர்கள் ஊமையாய்ப் போகிறார்களே. அப்படி யிருக்கநீ மனித சரீரமே யில்லாமல் மனித பாஷை எங்ஙனம் பேசுகிறாய்?” என்று கேட்டேன்.

 அப்போது வேப்ப மரம் சொல்லுகிறது: கேளாய்மானுடாமனிதனுக்கு ஒரே வாய்தானுண்டுஎனக்கு உடம்பெல்லாம் வாய். மனித பாஷை பேசுவதற்கு வாய் முதலிய புறக் கருவிகள் மனிதரைப் போலவே யிருத்தல் அவசியமென்று நீ நினைக்கிறாய். ஸாதாரண ஸ்திதியில் அவை அவசியந்தான். ஆனால்நான் ஸாதாரண மரமில்லை நான் அகஸ்திய முனிவரின் சிஷ்யன். தமிழ்ப் பாஷையில் எனக்குள்ள ஞானம் இக்காலத்தில் அகஸ்த்யரைத் தவிர வேறு யாருக்குமே கிடையாது."

 வேப்ப மரம் பின்னுஞ் சொல்லுகிறது:

 "நடந்த கதையை அடியிலிருந்து சொல்லுகிறேன். மானுடாகவனத்துடன் கேள். எனக்கு இப்போது முப்பது வயதுதானாகிறது. நான் இள மரம். பதினைந்து வருஷங்களின் முன்பு ஒருநாள் வஸந்த காலத்தின்போதுஇரா வேளையில் ஆச்சர்யமான நிலா வீசிக் கொண்டிருந்தது. நான் விழித்துக் கொண்டிருந்தேன். ஸாதாரணமாக மரங்கள் மனிதரைப் போலவே பகல் முழுவதும் விழித்துக் கொண்டிருக்கும். இரவானவுடனே தூங்கும். அன்றிரவு எனக்கு எந்தக் காரணத்தாலோ தூக்கமே வரவில்லை. நிலாவையும்வானத்தையும்சூழ்ந்திருக்கும் மரங்களையும் பார்த்துக் கொண்டு பிரமாநந்தத்தில் முழுகி யிருந்தேன்.

 அப்போது பதினாறு வயதுடைய மிகவும் அழகான மனித ஆண் பிள்ளை யொருவனும்அவனைக் காட்டிலும் அழகான பன்னிரண்டு வயதுடைய மனிதப் பெண் ஒருத்தியும் அதோ தெரிகிற நதியில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். சிறிது நேரத்துக்குள்ளே அவ்விருவரும் ஸாமான்ய மனிதரில்லை யென்பது எனக்குத் தெளிவாய் விட்டது. சிறகுகளில்லாமல் அவர்கள் வானத்தில் பறந்து விளையாடுவது கண்டேன். பிறகு ஒருவருக் கொருவர் பேசிய வார்த்தைகளிலிருந்து அவர்கள் இன்னாரென்று தெரிந்து கொண்டேன். அவ்விருவரும் யாரெனில்அகஸ்த்ய மஹரிஷியும்தாம்ரபர்ணியம்மனும்.

 "அகஸ்த்யர் ஸாதாரண காலத்தில் கட்டை விரலளவுடைய வடிவந் தரித்திருப்பது வழக்கம். ஆனால்அவர் காம ரூபி. அதாவதுநினைத்தபோது நினைத்த வடிவந்தரிக்கும் திறமை படைத்தவர். தாம்ரபர்ணி யம்மனும் அப்படியே. ஆதலால்அவ்விருவரும் அப்போது அதி சுந்தரமான மனுஷ்ய ரூபந் தரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்அவர்களுடைய கிரீடை பொழுது விடியும் வரை நடந்தது. அப்பால் தாம்ரபர்ணி மறைந்து விட்டாள்.

 வேப்ப மரம் சொல்லுகிறது: "கேளாய்மானுடாகவனத்துடன் கேள். தாம்ரபர்ணி யம்மன் பகலைக் கண்டவுடன் மறைந்து சென்று விட்டாள். அகஸ்த்யர் மாத்திரம் தனியாக வந்து எனதடியில்இப்போது நீ நிற்குமிடத்திலே படுத்துக்கொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்தனர்.

 "எனக்கு அந்த ஸமயத்தில் அகஸ்த்யருடைய சக்திக ளெல்லாம் நன்றாகத் தெரியாது. ஆதலால்அவர் யோகத்திலிருக்கிறா ரென்பதை அறியாமல் ஜலக் கிரீடையின் சிரமத்தால் ஸாதாரண நித்திரையிலிருக்கிறாரென்று நினைத்தேன். பொழுது விடிந்து ஏறக்குறைய ஒரு ஜாமமாயிற்று.

 "அப்போது அதோஉனக்கெதிரே ஒரு புளியமரம் நிற்கிறது பார் --அந்த மரத்தின் கீழே யுள்ள புற்றிலிருந்து ஒரு பெரிய நல்ல பாம்பு 'ஜூஸ்என்று சீத்காரம் செய்து கொண்டு அகஸ்த்யர் படுத்திருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து பாய்ந்து வரலாயிற்று. அதைக் கண்ட மாத்திரத்தில் நான் திடுக்கிட்டுப் போனேன்.

 “ 'ஐயோ! இந்தக் கொடிய பாம்பு இந்த மஹா புருஷனைக் கொன்றுவிடப் போகிறதே! இவரை எப்படியேனும் கண் விழிக்கும்படி செய்வோமானால்தம்முடைய தவ வலிமையினால் பாம்பை அடக்கி விடுவார் என்றெண்ணி அவரை விழிக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் என் இலைகளை அவர்மீது சொரிந்தேன். அவர் விழிக்கவில்லை. இதற்குள் பாம்பு அவரை நெருங்கி வந்து அவருடைய பாதத்தில் இரண்டு முறை கடித்தது. மூன்றாம் முறை கடிக்கும் பொருட்டும் படத்தைத் தூக்கிற்று.

 "அத்தருணத்தில் அவர் கண்ணைத் திறந்து பார்த்துக் கயிற்றைத் தூக்குவதுபோல் எளிதாக அந்தப் பாம்பைக் கையால் எடுத்துக் கழுத்தில் வளைய வளையச் சுற்றிக் கொண்டார். அந்தப் பாம்பும் கயிற்றைப் போலவே ஒன்றும் செய்யாமல் பரம் ஸாதுவாக அவர் கழுத்தில் கிடந்தது. கடியுண்ட இடத்தில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அதில் அவர் கொஞ்சம் மண்ணை யெடுத்துப் பூசினார். புண் உடனே ஆறிப்போய் சாதாரணத் தோலாய் விட்டது.

 - “இதைக் கண்டு நான் மிகவும் ஆச்சர்ய மடைந்தேன். இப்படிப்பட்ட மஹானிடம் ஒரு வார்த்தை பேசக்கூட யோக்கியதை யில்லாமல்ஊமை மரமாய் பிறந்து விட்டோமே என்றெண்ணித் துயரப்பட்டேன். எப்படியேனும் எனது கருத்தை அவருக்குத் தெரிவிக்க விரும்பிஅவர் காலின்மீது சில மலர்களையும்இலைகளையும் சொரிந்தேன். அவர் தலையை நிமிர்த்து என்னை நோக்கி, "வேப்ப மரமேஎன்று கூப்பிட்டார்.

 வேப்ப மரம் பின்னுங் கதை சொல்லுகிறது. "கேளாய்மானுடாகவனத்துடன் கேள். இங்ஙனம் என்னை அகஸ்த்யர் கூப்பிட்டவுடனே என்னை யறியாமலே என் கிளைகளிலுள்ள வாய்களினின்றும், 'ஏன் முனிவரே என்ற தமிழ்ச் சொற்கள் உதித்தன. என் உடம்பு முழுவதும் புளகிதமாய் விட்டது. மாற்றிப் பிறக்க வகை யறிந்து கொண்டேன்.

 வேப்ப மரப் பிறவிபோய் எனக்கு மனிதப் பிறவி யுண்டாயிற்றென்று தெரிந்து கொண்டேன்: உடம்பு மாறவில்லை. உடம்பு மாறினாலென்னமாறாவிட்டா லென்னநான் உடம்பில்லை. நான் ஆத்மாநான் போதம்நான் அறிவு. திடீரென்று வேப்பமரச் சித்தம் மாறிப் போய் எனக்குள் மனுஷ்ய சித்தம் சமைந்து விட்டது. மனுஷ்ய சித்தம் ஏற்பட்டாலன்றி மனித பாஷை பேச வருமாகோடி ஜன்மங்களில் நான் பெற்றிருக்க வேண்டிய பயனை அந்த முனிவர் எனக்கு ஒரே கணத்தில் அருள் செய்தார்.

 "எனக்கேற்பட்ட ஆனந்த மிகுதியால் என் பூக்களையும் இலைகளையும் கணக்கில்லாமல் அவருடைய பாதத்தின்மீது வர்ஷித்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சி பூத்தவராய், 'வேப்ப மரமேநேற்றிரவு நானும் தாம்ரபர்ணியும் இங்கு ராமநதியில் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்த காலத்தில் நீ பார்த்துப் பெரு மகிழ்வெய்திப் பல ஆசீர்வாதங்கள் கூறினாய். அதை நான் ஞான திருஷ்டியால் உணர்ந்தேன். அப்பால்சிறிது நேரத்திற்கு முன்பு நான் யோக ஸமாதியிலிருந்தபோது இந்தப் பாம்பு வருவதைக் கண்டு நீ என்னைக் காக்க விரும்பிஎன்னை எழுப்பும் பொருட்டாக என்மீது நின் இலைகளையும் பூக்களையும் சொரிந்தாய்.

 "இங்ஙனம் நீ என்னிடம் காட்டிய அன்பிற்குக் கைம்மாறாக உனக்கு நான் ரிஷி போதம் கொடுக்கிறேன். இதனால் உனக்கு ஸகல ஜந்துக்களின் பாஷைகளிலும் சிறந்த ஞானம் இயல்பாகவே உண்டாய்விடும். எல்லா ஜந்துக்களினிடத்திலும் ஸமமான பார்வையும்ஸமமான அன்பும் உண்டாகும். எல்லா உயிர்களிடத்திலும் தன்னையே காண்பதாகிய தேவ திருஷ்டி ஏற்படும். இவற்றால் நீ ஜீவன் முக்தி பெறுவாய்” என்றார்.

 "அது முதல் நான் அவர் கூறிய சக்திக ளெல்லாம் பெற்றுயாதொரு கவலையு மில்லாமல்யாதொரு பயமுமில்லாமல் ஜீவன் முக்தி பதமடைந்து வாழ்ந்து வருகிறேன்” என்று வேப்ப மரம் சொல்லிற்று?

 உடனே நான் அந்த வேப்ப மரத்தடியில் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினேன்.

 உனக்கென்ன வேண்டும்?” என்று கேட்டது.

 அப்போது நான் அந்த வேப்ப மரத்தை நோக்கி, "உனக்கெப்படி அகஸ்த்யர் குருவோஅப்படியே நீ எனக்குக் குரு. அந்த முனிவர் உனக்கருள் புரிந்த ஜீவன் முக்தி பதத்தை எனக்கு நீ எனக்கருள் புரிய வேண்டும்" என்று பிரார்த்தனை செய்தேன்.

 கொடுத்தேன்” என்றது வேப்ப மரம்.

 இந்த ஸமயத்தில் நான் உண்மையாகவே தூக்கந் தெளிந்து கண்ணை விழித்தெழுந்து நின்றேன்எழுத்தாணிக் குருவிகளும்சிட்டுக் குருவிகளும்வேறு பலவிதமான குருவிகளும் பறந்து கூவி விளையாடிக் கொண்டிருந்தன. அணில்களும்ஓந்திகளும் ஆடியோடிக் கொண்டிருந்தன.

 காக்கைகளும்கிளிகளும்பருந்துகளும்தட்டான் பூச்சிகளும்வேறு பலவகை வண்டுகளும் ஒளிக் கடலிலே களித் தோணி கொண்டு நீந்துவதுபோல் உலாவி வந்தன.

கண்ணுக்குப் புலப்படாத மறைவிலிருந்து ஓராண் குயிலும்ஒரு பெண் குயிலும் ஒன்றுக்கொன்று காதற் பாட்டுக்கள் பாடிக் கொண்டிருந்தன.

 ஆண் குயில் பாடுகிறது:

துஹுதுஹுதுஹு

துஹுதுஹுதுஹு

ராதா ரே"

                   (இதன் பொருள்: நிநீநீ நீநீநீ ராதை யடீ)

 பெண் குயில் பாடுகிறது:

துஹுதுஹுதுஹு

ராதா க்ருஷ்ணக்ருஷ்ணக்ருஷ்ண

 

வேப்ப மரம் தனது பசிய இலைகளை வெயிலில் மெல்ல மெல்ல அசைத்துக் கொண்டிருந்தது.

 'என்ன ஆச்சர்யமான கனவு கண்டோம்என்றெண்ணி யெண்ணி வியப்புற்றேன். இதற்குள் வெயிலேறலாயிற்று. எனக்கும் பசியேறத் தொடங்கிற்று.

 வேப்ப மரத்துக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுத் தோப்பினின்று புறப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

 

                          


 பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடாக விரைந்து களங்காணவிருக்கும்  

பாட்டிடையிட்ட பாரதியார் சிறுதைகள் 

முதற் தொகுப்புக்கு எம்மால் அமைக்கப்பட்டுவரும் 

கதைவரிசையில் இது ஒன்று. 

முன்னோட்டமாக....


      -இராஜ முத்திருளாண்டி

Monday, December 27, 2021

 பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடாக விரைந்து களங்காணவிருக்கும்  

பாட்டிடையிட்ட பாரதியார் சிறுதைகள் 

முதற் தொகுப்புக்கு எம்மால் அமைக்கப்பட்டுவரும் 

தோரணவாயிலின் இரண்டாம் பகுதி . 

முன்னோட்டம் வருகிறது இங்கே

      -இராஜ முத்திருளாண்டி


தோரண வாயில்.


 

II

 

வரலாறு (வரல் + ஆறு, வந்த வழி) அறிவது வேறு; விமர்சனம்/மதிப்பீடு/ திறனாய்வு செய்வது வேறு என்பதை நாம் அறிவோம். மிகப் பொதுவாகச் சொல்வதானால் வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப் படியான பதிவுகள் எனலாம். குறிப்பிட்ட காலம்வரை, குறிப்பிட்ட காலத்திற்கு  முன்னர் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்து (திரும்பிப்) பார்க்க உதவுவது வரலாறு, என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட உரியது.  ஆனால், தமிழ்ச்சிறுகதை வரலாற்றைப்  பதிவு செய்வதில் ஈடுபட்ட பலர் அவ்வரலாற்றைக் காலவரிசைப்படி முறையாகச் சரியாக, நிரவாமலும், தமிழில் குறிப்பிட்ட காலப் பகுதிகளில் விளைந்த சிறுகதைகளை அல்லது அக்கதைகளின் படைப்பாளிகளை- சரியான மதிப்பீட்டுக் கருவிகள் தம் கைவசமில்லா நிலையில், தத்தமக்குத் தோன்றிவாறு, ஏற்கத்தக்க தரவுகள் சுட்டாமல்- தி/றனாய்வு/விமர்சனம் செய்யவும் முனைப்புக் காட்டியுள்ளனர். வரலாறு வேறு, விமர்சனம் வேறு என்பதை உணர்ந்திருந்தும்,சேராச் சேர்க்கையாக,  வரலாற்றையும் விமர்சனத்தையும் தவறுபட இணைத்து, அவ்வாறு நிகழ்வது ‘தவிர்க்க முடியாததாகும்’[1] என ஏற்க இயலாத கருத்து நிறுவிப் பலர் - குழுக்களாகக் கூட்டமாக- இத்துறையில் பயணித்ததால் தமிழ்ச் சிறுகதையின் முறையான வரலாறு, முழுமையான திறனாய்வு இரண்டுமே குழம்பிக் காணப்படுகின்றன.

தமிழில் குறிப்பிட்ட ஒரு சிறுகதைப் படைப்பாளரது கால நிரலான படைப்புகள் பற்றி அல்லது குறிப்பிட்ட ஒருகாலகட்டத்தில் சிறுகதைப் படைப்புகளை வெளிக்கொணர்ந்தவர்கள் பற்றித் தெளிவான, காலமுறைப் பதிவுகள் இல்லாமல், விமர்சனத் / திறனாய்வுக்  கலப்புக் கூட்டி (அதனையும் சரிவரச் செய்யாமல்) கருத்துக்களை நடவு செய்துள்னர். எடுத்துக் காட்டாக:

·         பாரதியார் எழுதிய முதற் சிறுகதை எது?;

·  எட்டுச் சிறுகதைகள் மட்டுமே எழுதியுள்ள வ.வெ.சு ஐயரின் ஐந்து சிறுகதைகள் கொண்ட முதற் தொகுப்பு (மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்) எப்போது வெளிவந்தது? ;

·     மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் தொகுப்பில் கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் ‘குளத்தங்கரை அரச மரம்’கதை- ‘தமிழின் முதற் சிறுகதை’ என்று பல்லாண்டுகளாகப் பலரால் ஓங்கி ஓதப்பட்டுவரும் நிலையிலும் – முதலில் எப்போது வெளியானது? ஏன் வேறொருவர்  பெயரில் வெளிவந்தது?

என்பன போன்றவற்றிலும் ஏகப்பட்ட, வேறுபாடான பார்வைகள் விளைந்துள்ளன. மேலும், முன் குறிப்பிட்டுள்ள வ.வெ.சு ஐயரின் தொகுப்பில், உரிய விளக்கம் ஏதுமில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கும் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதை அத் தொகுப்புக்கு முன்பே வேறு ஒரு இதழில் வேறொருவர் பெயரில் வெளிவந்ததே பலருக்குத் தெரிந்திருப்பதாக அவர்களது எழுத்துக்கள் வழியே அறிய முடியவில்லை.

பாரதியார் காலத்திலும் சரி, அதற்குப் பின்னும் சரி,  தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்கள், இலக்கிய விமர்சகர்கள்,ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் முன்தோன்றியாய்ப் பாரதி  சிறுகதைகள் படைத்திருந்ததைச் சரிவர அறியாமற் கடந்துள்ளார்கள்; அறிந்ததுபோல் காட்டியுள்ள சிலரும் அப்படைப்புகள் எந்தக் கால வரிசையில், எந்தமாதிரியான அரசியல், சமூகப், பொருளாதாரப், பண்பாட்டுச் சூழலமைத்த பின்புலத்தில்  எழுதப்பட்டன என்பதையும் இணைத்துக் கருதி அப்படைப்புகளை நேர்மையாக, முழுமையாக மதிப்பீடு செய்யாமல் - தடங்கண்ட பாதையிலேயே சுகப் பயணம் மேற்கொண்டு,  சுயமுயற்சிகள் முற்றாக மங்கிக் - கடந்து சென்றுள்ளனர். தேராத் தடாலடிகள் சிலவும் காணலாம்.

எடுத்துக்காட்டு: ” பாரதியின் கதைகள் பலவும் மாசம் தப்பிப் பிறந்த மாமிசப் பிண்டங்களாகவே இருக்கின்றன.” என்ற ரகுநாதன்[2] கூற்று.

இவர் பாரதியாருடைய எந்தெந்தக் கதைகளை ஆராய்ந்து இந்த ‘மாமிசப் பிண்ட’ முடிவுக்கு வந்தார் என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம். முன்னர் இவரே வலிந்து போய் 

“இன்றைய சிறுகதை வளர்சிக்கு வ.வெ.சு அய்யர்தான் சிறந்த வழிகாட்டி. அவருடைய நடைத்தெளிவு ஒருபுறம் இருக்க, கதாம்சம் பிறந்த மேனியுடனேயே காட்சியளிக்கிறது”[3]

என.முன்மொழிந்துள்ளார். அய்யரது என்னென்ன கதைகளை ஆராய்ந்து ‘பிறந்தமேனியுடன் காட்சியளிக்கும்’  அவரது கதாம்சம்  கண்டு மகிழ்கிறார் என்பதெல்லாம் சொல்லப்படுவதில்லை இலக்கியவிமர்சன நூலாசிரியரால். யாரையும் சபிப்பதும், விரும்பியோர்க்குப் பிரம்ம ரிஷிப் பட்டம் சூட்டுவதும் வல்ல வஷிஸ்டர்கள் போல, எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுதான் வலம் வந்திருக்கிறார்கள் இவ்வகை இலக்கிய விமர்சகர்கள்.

பாரதியார்-வ.வெ.சு ஐயர் ஆகிய இருவருள் சிறுகதைத் துறையின் உண்மையான முன்னோடி பாரதியே என்பதை மறந்தும், மறுத்தும் முன்னரே பலர் உலவியதும் தற்போதும் சிலர் அவ்வாறு தொடர்வதும் நிதர்சனமே. இலக்கியத் தளத்தில் இவ்வகை விமர்சகர்களும் ஆய்வாளர்களும்  மிகப்பலராகப் பெருகி நிற்பதாலும், அவ்வினமே விரைந்து எளிதில் புற்றீசல்போல அதிகம் நிறைந்துவிடுவதாலும்,

சுமார் ஒரு நூற்றாண்டாக ‘தமிழின் முதல் சிறுகதை’ என்று வ.வெ.சு.ஐயரின் குளத்தங்கரை அரசமரத்தையே கிளிப்பிள்ளை மாதிரி நாம் பாடப்புத்தகங்களில் சொல்லிவந்தோம். இது பாரதிக்கு ஏற்பட்டஅநீதி.[4]

எனும் கருத்து தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. தக்க காரணங்களின்றிப் பாரதிக்கு இழைக்கப்பட்டுத் தொடரும்  அநீதியின் உச்சம் யாதெனில், பாரதியின் முதல் சிறுகதை வெளிவந்து சுமார் பத்தாண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த - முதலில்  வேறொருவர் பெயரில் வெளிவந்த - அதிலும் தாகூரின் வங்காளக் கதை ஒன்றின் அப்பட்டமான  தழுவல் கதையின் அடிப்படையில்-  வ.வெ.சு ஐயருக்குத் தமிழ்ச் சிறுகதையின்  மூலவர்,முதல்வர், பிதா, பிதாமகர் என வகைதொகை அளவிறந்த மகுடங்கள் இதுவரை அணிவிக்கப்பட்டுள்ளதாகும்.

சிறுகதைப் படைப்புத்துறையில், நாமறிந்துள்ளவரையில், பாரதி, 1905-1906இல்,  அவர்  ஆசிரியராக இருந்த சக்கரவர்த்தினி இதழில் பகுதிகளாக (அத்தியாயங்களாக) அவரது முதல் சிறுகதைப் படைப்பான துளஸிபயி என்ற இரஜபுதனக் கன்னிகையின் சரித்திரம் (துளஸிபாயி சரித்திரம்)  என்ற படைப்பை ‘ஒரு  சிறுகதை’ என்று செம்மாந்த படைப்பாண்மையுடன் வகைப்படுத்தி, அறிவிப்பும் செய்து ஷெல்லிதாஸ் என்ற புனைபெயரில் வெளியிட்டுள்ளார். அதற்குப் பிறகு, 1910இல் அவரது ஆறில் ஒருபங்கு சிறுகதையைத் தனி வெளியீடாகப் பரவிடச்செய்துள்ளார்.படைப்பு பலவாக அறுபதுக்குமேல் சிறுகதைகள் படைத்துள்ள பாரதி, இதற்கிடையிலும் (1905-1910)  சில சிறுகதைகளைப் படைத்திருக்கலாம். ஆனால் அக்காலத்தில் பாரதியின் சிறுகதைகள் தொகுப்பாக வராத காரணத்தால், தெளிவாக வெளியீட்டு ஆண்டு அறியப்பட்ட இருகதைகளை இங்கு குறிப்பிட்டுள்ளோம். ஆனால் இவற்றின்  வெகு பின்னர்தான்-  1915இல்- முதலில் விவேக போதினி செப்டம்பர், அக்டோபர் மாத இதழ்களில் ஸூ.பாக்கியலக்ஷுமி அம்மாள் என்பவர் பெயரில் குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை வெளியாகியுள்ளது. ஸூ.பாக்கியலக்ஷுமி அம்மாள் என்பது வ. வெ. சு ஐயர் அவர்களது மனைவி பெயராக இருக்கலாம். ஆனால் அப்பெயரை இக்கதைக்கு முன்னும் பின்னும் வ.வெ.சு தனது புனை பெயராகவோ, மாற்றுப் பெயராகவோ பயன்படுத்திய ஆதாரங்கள் ஏதுமில்லை. முன் குறிப்பிட்ட விவேகபோதினி இதழில் இருபகுதிகளாக பாக்கியலக்ஷுமி அம்மாள் எழுதிய கதை தமிழில் ‘சிறுகதை’ என்ற சொல்வழக்கு பயன்பாட்டிற்கு வந்த பின்னும் -தமிழ்ச் சிறுகதையின் பிதா எனப் போற்றப்படும் வ.வெ.சு ஐயரின் படைப்பாக இருப்பின் - ஏன் “ “ஒரு சிறிய கதை”[5] என்ற குறிப்புடன் வெளியானது? வேறொரு பெயரில் இவ்வாறு வெளிவந்த ‘ஒரு சிறிய கதை,’ தனது சிறுகதை என்பதை இலக்கியத் தார்மீக முன்னெடுப்புடன்  பொது அறிவிப்புச் செய்யவேண்டிய  வ.வெ.சு எங்கும் அதனைச் செய்யவில்லை, ஏன்?. எவ்வகையில் இக்கதை வ. வெ.. சு. ஐயருக்குப் பாத்தியப்பட்டது என்பதற்கான சிறு விளக்கமும்கூட வ. வெ. சு. ஐயராலோ, அவரது புகழ் பாடிகளாலோ அல்லது சார்பற்ற(வரெனக் கருதக் கோரும்) இலக்கிய ஆய்வாளர்களாலோ எடுத்து வைக்கப்படவில்லை. மாறாகப் புதுச்சேரிக் கம்ப நிலையப் பிரசுரம்-என - ஆண்டு குறிப்பிடாமல் வெளிவந்துள்ள- மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்ற- குளத்தங்கரை அரசமரம் கதையைக் கடைசியாக வைத்துள்ள, ஐந்து சிறுகதைகள் மட்டும் அடங்கிய அத்தொகுப்பின் முகப்பாக ‘ இவை சந்திரகுப்தன் சரித்திராசிரியர் வ.வெ.ஸூப்ரஹ்மண்ய ஐயரால் எழுதப்பட்டவை என வெளியிட்டிருப்பது இலக்கிய அற வறட்சியாகவும், தொடர் நெருடலாகவும்  உறுத்துகிறது. இந்தக் குறிப்பின் அடிப்படையில் பார்த்தால் ‘சந்திர குப்த சக்ரவர்த்தி சரித்திரம்’ வெளிவந்த 1918க்குப் பின்னர்தான் ‘மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்’ எனும் தொகுப்பு வெளியாகி இருக்க வேண்டும்.

இத்தொகுப்பு வெளியான ஆண்டு குறித்துக்கூட எண்ணற்ற, ஆதாரமற்ற கருத்துகள் தொடர்ந்து நிலவி வருவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. “வருடக் கணக்கை வைத்துப் பார்த்தாலும் சரி, இலக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அளவிட்டாலும் சரி, தமிழில் நவீனச் சிறுகதை –வேறு பல சமகால இலக்கிய வடிவங்களைப் போல –சுப்பிரமணிய பாரதியிடம் இருந்தே துவங்குகிறது என்று ஆதாரங்களுடன் மாலன்[6] வலியுறுத்துவதை  ஏற்றுக்கொள்ள இன்னும் இலக்கியக் களத்தில் தயக்கம் இருப்பதற்குத் தக்க நியாயங்கள் நிரவிய காரணங்கள் ஏதுமில்லை.



[1] கா.சிவத்தம்பி, தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ்ப் புத்தகாலயம், மூன்றாம் பதிப்பு, 1980 இரண்டாம் பதிப்பின் முன்னுரை பக்.9

[2] ரகுநாதன்,இலக்கிய விமர்சனம், மீனாட்சி புத்தக நிலையம், நான்காம் பதிப்பு 1980 பக் 98

    [3] ரகுநாதன் 1980 பக்97-98

[4] தமிழ் மகன், தமிழ் சிறுகதைக் களஞ்சியம், விகடன் பிரசுரம்,சென்னை. 2013, பக்.14.

[5] பார்க்க: பக் 101, விவேக போதினி, செப்டம்பர்,1915; பக்கம் 138, விவேக போதினி அக்டோபர்,1915

[6] மாலன், அன்று, தொகுதி 1,ஓரியண்ட் லாங்மென், சென்னை,1983, முன்னுரை,

Friday, December 24, 2021

 


பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடாக விரைந்து களங்காணவிருக்கும்  பாட்டிடையிட்ட பாரதியார் சிறுதைகள் 

முதற் தொகுப்புக்கு எம்மால் அமைக்கப்பட்டுவரும் 

தோரணவாயிலின் முதற்பகுதி. 

முன்னோட்டம் வருகிறது இங்கே

      -இராஜ முத்திருளாண்டி


தோரண வாயில்.



 

முப்பத்தொன்பது ஆண்டுகளே தமிழ் நிலத்தில் உருவாழ்ந்து முடித்துக்கொண்டாலும் (11-12-1882 11-9-1921),  அதனிலும் குறுகிய தனது படைப்புக் காலத்திற்குள், படைப்புப் பலபடைத்துத் தமிழ்க் களத்தில் நிலைபெற்று இன்னும் தொடர்வதுதான் பாரதியின் பெருவாழ்வுச் சிறப்பு. தான் எழுதக் கைவைத்த எல்லாத் துறைகளிலும், எதனிலும் குறுகாமல், எழுகதிரென விகசித்து நின்று, தமிழ்ப் படைப்பு மரபின் பரிமாணங்களனைத்தையுங் காட்ட வல்லானாகவும், அதற்குமேலும் கூட்டிக் காட்டியவனாகவும் பாரதி   விளங்கினான். அவனது - கவிதை, வசனகவிதை, கட்டுரை, சிறுகதை உள்ளிட்டு – வகைவகையாய்த், தொகைதொகையாய் அணிவகுத்த படைப்புகள்  யாவற்றையும் - ‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்’ என முழங்கிச்- ’சொல் புதிது,பொருள் புதிது,முறை புதிது, நடை புதிது, வகை புதிது’  என்ற அணிவகுப்பாய்க் களமாட அனுப்பிவைத்தான். முழுமையாக அவனது படைப்புகளைச் ‘சுயமாக’க் கூர்ந்து, ‘ஒருபால் கோடாது’ சீர்நோக்க முயல்பவர்கள், பாரதி தனது படைப்புகளை, மரபைப் பின்பற்றியதாகவோ அல்லது  மரபுடன் புதுமை கலந்ததாகவோ அல்லது மரபு அருகிய முற்றிலும் புதிய வகையாகவோ வார்த்தளித்திருப்பதை அறியக்கூடும். பன்மொழியாற்றலும் பன்முகப் படைப்புத் திறனும் கொண்டிருந்த பாரதியைத் தமிழ் இலக்கியத் தளத்தில் ஒரு பெருங் கவிஞனாக (‘மகா கவி’ என) மட்டுமே ஏற்றிப் போற்றி அங்கீகரிப்புச் செய்யும் பொதுப் பழக்கம் நிலைகொண்டுவிட்டதால், தமிழுக்குப் புதுமை சேர்க்கவேண்டும் என்ற தணியாத் துடிப்புடன் பிறந்த அவனது பிறதுறைப் படைப்புகளை - எடுத்துக்காட்டாகப் பாரதி,  சிறுகதைத் துறையிலும் - புதியன ‘சிருஷ்டிக்கும்’  பிரம்மனாக - முன் நின்றதைக் காலத்தே  கண்டுணர்ந்திருக்காத நிலை ஏற்பட்டுவிட்டது.

 

வாழ்ந்தகாலமெலாம் தாங்கவொண்ணாத் தரித்திரமும் தமிழும் பெருக வாழ்ந்த பாரதி மறைந்த சில ஆண்டுகள் கழிந்து ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் (1933) “பொதுவாகக் கருதுமிடத்து, தமிழ் இலக்கிய உலகிற்கு சுப்பிரமணிய பாரதி ஒரு புதிய ஜோதியையும் சக்தியையும் தேடி அளித்தார்” என்று ஒரு புதுப் பார்வையுடன்  மதிப்பீடு செய்ததோடு, “அவர் ஒரு நூதன சக்தியாதலால் அவருடைய பெருமையைப் பழைய முறைகளில் பழக்கம் பெற்ற தமிழ்ப் புலவர்கள் அறியமுடியாமல் இருக்கிறார்கள் என்று அடர்ந்த  கவலையையும் வெளிப்படுத்தியிருந்தார்.[1] இதே மாதிரிக் கவலையைப், பின்னாட்களில் வெளிவந்த பாரதி குறித்த தனது நான்காவது நூலில், தன் பாங்கில், தொ.மு.சி.ரகுநாதன் (1982), “பாரதி வரலாற் றாசிரியர்களும் பாரதி பற்றிய நூலாசிரியர்களும், கட்டுரையாளர்களும் மற்றும் பிறரும்”  பாரதி பற்றிக் “காணத் தவறிவிட்ட அல்லது கண்ணை மூடிக் கொண்டு விட்ட, சொல்லப்போனால்.. மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட, திரையிட்டு மூடப்பட்ட பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வின்” செய்திகள் பல இருப்பதாகப் பதிவிட்டுப் பரபரப்பு ஏற்படுத்தினார்.[2] கல்விக் கள மாசேதுமற்றுச் சாயா நேர்மைச் சிறப்பாய்வு நூலாக, அண்மைக் காலத்தே பாரதி பற்றி வெளிவந்த பாரதி கிருஷ்ண குமாரின் ‘அருந்தவப் பன்றி’ ஆழ்ந்தகன்று தோண்டிக் காட்டியுள்ள  அதிர்ச்சித் தகவல்களில் ஒன்று, ஆண்டுகள் பல கழிந்தும், பாரதி சரியாகப் புரிந்து கொள்ளப்படாமலோ அல்லது வேறு புறக் காரணங்களால் மறைக்கப்பட்டோ முழுதாக இன்னும் அறியப்படவில்லை என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகிறது.  முன்குறிப்பிட்ட அந்த நிலைகளில்  பெருமாற்றம் எதுவும் நிகழாமலே அவை தொடர்கின்றன என்பது நமைக் கலங்க வைக்கிறது.  “நேரம் கிடைக்கிற போதெல்லாம் பாரதியின் படைப்புகளையோ பாரதி குறித்த படைப்புகளையோ வாசிப்பது பழக்கம்” எனக் கொண்டிருப்பதால், உழைத்துக் ‘கவியுளம் கண்டு’, பாரதியின் ‘சொற்சுரங்கத்திலிருந்து’  பாரதி கிருஷ்ணகுமார் கடைந்து கொண்டு வந்தளித்திருக்கும் ஆவணச் சுருக்கம் இதுதான்: 1909இல் பிறந்த மகாகவி பாரதியின் பாட்டொன்று,  (கவிதாதேவி அருள் வேண்டல்/ கவிதா தேவிக்கு வேண்டுகோள் ) சிலருக்கு நெருடலாக இருக்குமோ என அறியாமையாலஞ்சிப் பலரால், பலகாலமாக (1909 முதல் 1987 வரை)  எதேச்சதிகாரமாகத் தணிக்கைக்  கத்தரி போடப்பட்டும், தான் தோன்றியாகத்  தலைப்பிடப்பட்டும், தவறாகப் பகுக்கப்பட்டும்  (தொ.மு.சி ரகுநாதன்  கூறியதுபோல, ‘ மறைக்கப்பட்டு.......திரையிட்டு மூடப்பட்டு) வெளித் தள்ளிய பகுதிகளே (83/172) நாளதுவரை வெளிச்சத்தில் நின்றிருக்கின்றன என்பதாகும்.[3]  இருட்டில் புதைக்கப்பட்டுக் கிடந்த ‘கவிதாதேவி அருள்வேண்டல்’ பாடலின் உயிர்ப்பகுதிகளில் பாரதியின் கவியாற்றலிருண்டு நின்ற  ஆறாண்டு வாழ்வின் அவலச்சரிதை அவர்மொழியிலேயே, நேர்மையின் வெளிச்சங் கொண்டொளிர்வதாக பாரதி கிருஷ்ணகுமார் அறிந்து காட்டியிருப்பதைக் கண்ணுறும்போது, மேலுங் கூர்ம அகழ்வில், கீழடிபோல், பாரதிப் புதையல் பல கிட்டலாமெனும் எதிர்பார்ப்பமுதை யல்லவா அளித்திருக்கிறது அருந்தவப் பன்றி?’

 

‘’பிற நாட்டார் நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” என்ற இலட்சிய வேட்கையோடு எழுதப் புறப்பட்டுவந்தவனல்லவா எட்டையபுரத்து இளசை?. படைப்புக் களம் நின்று சொன்னபடி செய்தான். பாட்டாறாய்ப் பரவித் தமிழ்ப்பரப்பை அவன் செழுமைப்படுத்திக் கொண்டிருந்த காலத்திலேயே உரைநடையிலும் நிறைசெய்தான் பாரதி.  ”உரை நடைப் படைப்புத் துறையில், குறிப்பாகச் சிறுகதைத் துறையில் அவருக்குத் தமிழில் குறிப்பிடத் தக்க முன்னோடிகள் இல்லையென்றே கூறலாம்”  என உறுதி சொல்லுகிறார் அகிலன்.[4] அதேசமயம்,  பராசக்தியைப் பற்றிக்கொண்டிருந்த பாரதியையே பற்றிக்கொண்டு, சுற்றிச்சுற்றிப் பாரதி படைப்புகளைத் தேடிப் பதிப்பித்து அரும்பணியாற்றிய முன்னோடிகளில் சிறந்தவரான - பெ.தூரன், “பாரதியாரின் உரைநடை வெகுகாலமாகச் சரியாக மதிப்பிடப்படவில்லை” என்று  தனது ஆழ்ந்த ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளதையும் [5] இங்கே சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது. இதே உண்மையை வேறு வகையாகச் சிட்டி-சிவபாத சுந்தரம் தமது நூலில்[6]  “தமிழ்ச் சிறுகதைப் படைப்பில் பலருடைய கவனமெல்லாம் (அவரது) கவிதையளவில் நின்றுவிட்டதால் தீவிரமாக ஆராயப்படவில்லை” என்று வெளிப்படுத்தியுள்ளதையும் சேர்த்து நினைவிற் பதித்து மேற்செல்லலாம்.

 

சற்று முன் சென்று, மூத்த தமிழாளுமைகளது கருத்துக்களை அறிய முற்படும்போது, விளக்கங்கள் ஏதுமின்றி, ஆலய மூலஸ்தானத்தே புரியாப் பாங்கில் வேத மந்திர உச்சாடனங்கள் ஒலிப்பது போலத் தமது கருத்துகளை அவர்கள் ஓதிச் சென்றுள்ளனர். “ நாம் முதன் முதலாகத் தமிழில் காணும் சிறுகதைகள் 18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் என்பவையே ஆகும்” [7] என்றும், “சிறுகதை அதன் முழு வடிவத்தில் முதன் முதலில் வ.வெ.சு.ஐயரின் பேனா முனையிலிருந்து வெளிப்பட்டது”[8] என்றும் பொத்தாம் பொதுவாகத் தத்தமக்கு வந்தவாறு மொழிந்து சென்றுள்ளனர்.

 

கல்வி நிலையங்களிலிருந்து வெளிவரும் ஆய்வுகளோ, நூல்களோ,கட்டுரைகளோ உண்மையாக உட்சென்று ஆராயாமல்- ஊதிய உயர்வுக்கும் பெயருக்குமுன் சூட்டிக்கொள்ளும் பட்ட(டு)க் குஞ்சங்களுக்கும் ‘போதிய அளவுக்கு’ மட்டுமேயான மேலோட்ட ஆய்வுகளில் திளைப்பதால் - மந்தைக்  குணத்தில், சாய்கிற பக்கம் சாய்கிற பாங்கில் சாய்ந்து ‘காணாததையெல்லாம் கூடக் கண்டதுபோல்’ விண்டுரைக்கும் கிளிப்பேச்சாக உலவிவருகின்றன. 

இரு எடுத்துக்காட்டுகள் இதோ:

“மேலை நாட்டில் சிறுகதை ஒரு தனி இலக்கியமாக வளர்வது கண்டு தமிழ் மொழியும் அப்பேறு பெறவேண்டுமென ஆர்வம் கொண்டவர் வ.வெ.சு ஐயர்.அவரது மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தன. வங்காளத்தில் தாகூர் எழுதிய சிறுகதைகள் தமிழ்நாட்டு அறிஞர்களுக்கு ஒருவகைத் தூண்டுகோலாகவும் எடுத்துக் காட்டாகவும் அமைந்தன. அவற்றைக் கண்ட பாரதியார் தாமும் தமிழில் சிறுகதைகள் எழுதவேண்டும் என்று ஆர்வம் கொண்டார். ஆனால் வெற்றி பெறவில்லை..வ.வெ.சு.ஐயர்  மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகளை 1927ஆம் ஆண்டு வெளியிட்டு வெற்றிபெற்றார்”

என மிகப் பொதுப்படையான, அடிப்படையிலேயே  தப்பும் தவறுமான அறிவிப்புகளைச் செய்து சென்றிருக்கின்றனர்.[9] வங்கமொழி நன்கு அறிந்திருந்த பாரதியாரே தாகூரின் சிறுகதைகளை மூல மொழியிலிருந்து தமிழில் பாராட்டத்தக்கவாறு மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார் என்பதை இந்நூலாசிரியர் அறிந்துள்ளாரா என்பது ஐயமாகவே உள்ளது.மேலும். நூலசிரியர் குறிப்பிடும் ஆண்டில் (1927) வெளிவந்த  மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் தொகுப்பை ஐயர் ‘வெளியிட்டு வெற்றி பெற்றதாகக்’ கூறுவது அபத்தமாகும். அந்த 1927 தொகுதி என்பது, 1918 (?) வாக்கில் புதுச்சேரிக் கம்ப நிலைய வெளியீடாக வந்த மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் முதற் பதிப்பில் இருந்த ஐந்து கதைகளுடன், மூன்று கதைகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் எட்டுக்கதைகளாக – 2014இல் , பாபநாசம் நீர்வீழ்ச்சியில் வ.வெ.சு தவறி வீழ்ந்திறந்தபின் - அவரது மனைவி பாக்யலெக்ஷுமி அம்மாள் சார்பில் சங்கு கணேசன் என்பவர் வெளியிட்டதாகும். ‘பாரதியார் வெற்றிபெறவில்லை; வ.வெ.சு வெற்றிபெற்றார்’ என்று பொதுப்படையாக ஆதாரங்கள் சுட்டாமல் கூறுவதெல்லாம் ஆய்வுக் கருத்தாகா; உடனடித் தள்ளுபடிக்கு உரியனவே.

பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறையின் பச்சையப்பன் ஆய்வரங்க வெளியீடொன்றில் (1998)[10] ‘சிறுகதை’ என்ற தலைப்பில் கட்டுரை வழங்கியிருப்பவர்,

தமிழ் சிறுகதையின் தொடக்கம் 1913 ஆண்டளவில் தான்’’ என்று

(தவறாக) அறுதியிட்டும், “ அது குறித்த பார்வை முதன்முதலாக வ. வே. சு ஐயரால்  நோக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் (1917)என்ற சிறுகதைத் தொகுதியில் சூசிகை ஆகிய முன்னுரைப் பகுதியில் சிறுகதை இயல்புகளை சுட்டிக்காட்டியுள்ளார். …. சிறுகதை பற்றிய புரிதல் அவருடைய முன்னுரையிலிருந்து தெரியவருகிறது.’’ எனக் கதைத்திருப்பதும் காணப் பதைக்கிறது நெஞ்சம்.

குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதைத் தொகுதியே கிடையாது என்பதை அறியாமலும், குளத்தங்கரை அரசமரம் எனும் கதைக்கு வ.வெ.சு  சூசிகையே அமைக்கவில்லை என்பது தெரியாமலும், மேலும் சூசிகை என்பது அந்தந்தக் கதையின் முன் சுருக்கமாகவே சொல்லப்பட்டு கதைக்குள் வாசகர்களை அழைக்கும் பாணியில் எழுதப்பட்டவையேயன்றி, ஆய்வரங்கம் தொகுத்துள்ள கட்டுரை கூறியிருப்பதுபோல ‘சூசிகை ஆகிய முன்னுரைப் பகுதியில் சிறுகதை இயல்புகளை சுட்டிக்காட்டியுள்ளார்’ என வ.வெ..சு பற்றிப் பதிவு செய்திருப்பது சூசிகையைக் ‘காணாமலே கண்டதாக’ விண்டுரைக்கும் அழிச்சாட்டியமே.

 

இங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ள போக்குகளால் பொதுவாகத் தமிழ் இலக்கிய வரலாற்றிலும், தமிழ்ச் சிறுகதைகள் குறித்த வரலாற்று வழி ஆய்விலும், பாரதி குறித்த ஆய்வுகளிலும். நிகழ்ந்து நிலவுகின்ற குறைகளும் பிழைகளும் வெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பாதைகளை மறித்துச் சரியான பார்வைகளையும் மறைத்து நிறைந்துள்ளன என்ற. உண்மை வெளிப்படுகிறது அல்லவா?

 

இச்சூழலில்,காய்தல் உவத்தலின்றி, எவ்வகைப் புதுப்பிழைக்குமிடமிலா வகையில், ஆழ்ந்தும்,விரிவாகவும் தற்போதாவது தமிழ்ச் சிறுகதை வரலாற்றைக் காலநிரலில், முறையாக ஆய்ந்து, தெளிந்து, உண்மையைக்  கண்டுரைக்க வேண்டிய அவசியங்கள் பலவாகக் கிளைத்துள்ளன என்பதை இத்தோரண வாயிலில் நின்று  அறிவிப்புச்செய்யும் வாய்ப்பெடுத்துக் கொள்கிறேன். அப்படி உண்மை காண முயன்றுவரும்  தேடலில் நானும் இயன்றவாறு இணைந்துள்ள நிலையில், சும்மா “சுவடு கண்ட வழியே” (க.நா.சு. சொற்பிரயோகம்) செல்லாமல், உண்மையறிந்து சொல்ல உறுதி கொண்டுள்ள இலக்கிய நேர்மைப் பார்வை  என்பதன்றி, மற்றபடி எவர் மீதும்  காழ்ப்போ, யார் மீதும் அதீதப் பிரீதியோ ஏதுமில்லை எமக்கென்பதும் இங்கு தொடக்கத்திலேயே பிரகடனப்படுத்தப்படுகிறது.

 

தற்காலச் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முன்னெடுப்புகள் மேற்கொண்ட முதல் மூவராக அறியப்பட்டுள்ள பாரதியார், மாதவையா, வ.வெ.சு ஐயர் ஆகியோருள் யார் தமிழ்ச் சிறுகதையின் தந்தை? என்ற விவாதம் பெரும்பயன் விளைவிக்க வல்லதல்ல என்றாலும், தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சி, வரலாற்று விமர்சன (Historical criticism of Tamil Short Stories) நோக்கில், இதுவரை நம்முன் நிலவச்செய்யப்பட்டிருக்கும் முந்தைய கருத்துக்களைச் சாய்ந்தொருபால் கோடாத மறுபார்வைக்கு உட்படுத்துவது தவறாகாது. சரியானதை உள்ளவாறு ஏற்றுக்கொண்டு, குறைக்கிடந்தரும் கருத்துக்களை நேர்மையாக எதிர்கொண்டு அவற்றின் மாற்று (உண்மை) நிலைகள் காண உதவும் எதிர்பார்ப்பிலேயே இனிவரும் முன்வைப்புகள் இங்கே.

                             ... வளரும்.



[1] A.V.Subramaniya Aiyar, Modern Tamil Literature,Sarada and Company,1933 ( தமிழ் இலக்கியம்: தற்காலம், பக்.51)

[2] தொ.மு.சி.ரகுநாதன்,பாரதி காலமும் கருத்தும்,1982 முன்னுரை

[3] பாரதி கிருஷ்ணகுமார், அருந்தவப் பன்றி,சுப்பிரமணிய பாரதி, மூன்றாம் பதிப்பு 2018’ பக் 6

[4] அகிலன், பாரதியின் கதைப்படைப்பு,மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர்,1982 அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பக்197

[5] பெரியசாமித் .தூரன், பாரதி நூல்கள்: ஓர் திறனாய்வு, வானதி பதிப்பகம், முதற் பதிப்பு,1982

[6]சிட்டி-சிவபாத சுந்தரம், தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும், 1989

[7] டாக்டர் மா.இராசமாணிக்கனார், இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி, ,பாரி நிலையம், சென்னை, மு.ப.1978, பக்244

[8] தெ.பொ.மீ.,தமிழர் நாகரீகமும் தமிழ் மொழி வரலாறும், தமிழ் இலக்கிய வரலாறு, வர்த்தமானன் பதிப்பு,2021, பக்.578

[9] டாக்டர் மு.வரதராசன், இலக்கிய மரபு, பக்168-169

[10] பச்சையப்பன் ஆய்வரங்கம், பச்சையப்பன் கல்லூரி, ஆராய்ச்சி வரலாறு, முதல் தொகுதி, 1998 முனைவர் இராம குருநாதன் கட்டுரை.