சனி, 26 செப்டம்பர், 2020

 இலக்கியச் சொல் வரிசை-20
மலைபடுகடாம்(வரி 62)


" மதி மாறு ஓரா நன்றுணர்..."

மனமே நாம் கொள்ளுவோம்.

நமதறிவின் ஆக்கங்கள்  குறையுமாறான எச்செயலையும் என்றும் செய்ய இசையோம் என்பது நமக்கு மரபிலிருந்து வளர்ந்திருக்கும் நற் பண்பாகும்.

அறிவின்பாற் சென்று ஆக்கங்கள் பெருக்குவோம். அறிவு பிறழா வழியே நம் பயணப் பாதையாகட்டும்.

நாளும் நன்றுணர்வோம்; நல்லறிவிலிருந்து மாறோம்.

*





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக